பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்க முடியாமல் தந்தையை காவு வாங்கிய கொரோனா.. இராமநாதபுரத்தில் சோகம்.! - Seithipunal
Seithipunal


கொரோனாவால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி தனக்கு பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருங்குளம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கோகுல்நாத். இவரது மனைவி ராதிகா. இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், ராதிகா மீண்டும் கர்ப்பிணியாக இருந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக ராதிகா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு, அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கோகுல்நாத்தின் தந்தை ராமய்யாவுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கொரோனா ஏற்பட்டுள்ளது. 

அவருக்கு உதவி செய்ய கோகுல்நாத் மருத்துவமனையில் தங்கியிருந்து தந்தையை பார்த்து வந்த நிலையில், கோகுல்நாத்திற்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த கோகுல்நாத், நேற்று உடல் நிலை மோசமடைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் கோகுல்நாத் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Man Died due to Corona he Did not See his New Born Male Baby 24 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->