6 வருட காதல்.. கணவனுடன் பறந்த கிளி.. பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு.!!
Ramanathapuram Love girl Marriage Love boy 7 May 2021
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டானம் கிராமத்தை சார்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் அகல்யா (வயது 23). இவர் காரைக்குடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி பயின்று வந்துள்ளார்.
இவரது உறவினர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை சூளக்கரையை சார்ந்த ஜேசுராஜ் என்பவரின் மகன் அருளானந்த் (வயது 26). அருளானந்த் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் இருக்கும் பேக்கரியில் பணியாற்றி வந்துள்ளார்.
அருளிற்கும் - அகல்யாவிற்கும் இடையே கடந்த 6 வருடத்திற்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் உறவினர்கள் என்ற முறையில் பழகி காதல் வயப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் பெற்றோருக்கு அருள் - அகல்யாவின் காதல் தெரியவரவே, இருதரப்பு பெற்றோர்களும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அகல்யா தனது வீட்டினை விட்டு வெளியேறி நாமக்கலுக்கு வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் அங்குள்ள பரமத்தி வேலூர் கண்ணம்பாளையம் காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்ட நிலையில், அகல்யா தனது காதல் கணவருடன் நல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இவர்களிடம் புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் இருதரப்பு பெற்றோரரையும் அழைத்து பேசிய நிலையில், இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் கணவருடன் அகல்யா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ramanathapuram Love girl Marriage Love boy 7 May 2021