#BigBreaking || வரும் திங்கள் கிழமை, தமிழகத்தில் இரு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை.!
RAMANATHAPURAM LOCAL LEAVE
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், நாளை மறுநாள் திங்கட்கிழமை ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில், கொடியேற்றம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா உள்ளிட்டவற்றுக்கு பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நாளை நடக்க உள்ள தேரோட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நாளை மறுநாள் திங்கட்கிழமை ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, நாளை மறுநாள் திங்கட்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
RAMANATHAPURAM LOCAL LEAVE