விதவை பெண்கள் டார்கெட்.. செல்போனில் ஹேக்கிங் சாப்ட்வேர்.. ராமநாதபுர காமுக கும்பலின் பகீர் வாக்குமூலம்.!!
Ramanathapuram girl sexual torture and sexual abuse police arrest culprit
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி பகுதியை சார்ந்த 3 பேர் ஆபாச படங்களை வாட்ஸப்பிற்கு அனுப்பி மிரட்டி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் வந்துள்ளது. இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறை அதிகாரி, பாதிக்கப்பட்ட பெண்களை வரவழைத்து, பெண் ஆய்வாளர் மூலமாக விசாரணை செய்துள்ளார். இதில் காவல் துறையினரை அதிர்ச்சியாக்கும் வகையில் பல தகவல் வெளியே வந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட ஏர்வாடி பகுதியை சார்ந்த 38 வயதுடைய பெண்மணி, கணவரால் கைவிடப்பட்டு வாழ்ந்து வருகிறார். இவருக்கு 17 வயது மகன் மற்றும் 15 வயது மகள் இருக்கின்றனர். இவரை சகாபுதீன் என்ற நபர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை சகாபுதீன் உட்பட 3 பேர் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தை பேசி சகாபுதீன் ஏமாற்றியது தெரியவரவே, பெண் சகாபுதீனை விட்டு பிரிந்துள்ளார். இதற்குப்பின் பெண்ணிற்கு பலரும் தனிமையில் உள்ள புகைப்பட மற்றும் வீடியோ தம்மிடம் இருப்பதாகவும் தனது ஆசைக்கு இணங்குமாறும் கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சகாபுதீன், செய்யது அபுபக்கர் பாதுஷா, செய்யது அலிம் பில் ஆகிய நான்கு பேரின் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதில் ஏர்வாடி பகுதியை சார்ந்த பாதுஷா, மற்றும் அவரது சகோதரர் ஷாஜி ஏர்பாத் நெட் கபே என்ற ஆன்லைன் சேவை மையத்தை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், இங்கு அலைபேசி ரீசார்ஜ் செய்ய வரும் பெண்களின் அலைபேசியில் அவர்களுக்கே தெரியாமல் செல்போனை ஹேக்கிங் செய்யும் மென்பொருளை ஏற்றி, அவர்களின் அந்தரங்க உரையாடல்கள் மற்றும் அவர்களின் நண்பர்களுடன், கணவர்களுடன் எடுத்த புகைப்படம் மற்றும் விடியோவை கைப்பற்றி மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கிடைக்கும் பெண்களின் புகைப்படங்களை முதலில் பாதுஷா, ஹாஜி, சகாபுதீன் ஆகியோர் வெளிநாட்டில் வசித்து வரும் ஆலிம் என்பவனுக்கு அனுப்பி, அவன் மூலமாக சில வாட்சப் குழுக்களில் பகிர்ந்து மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Ramanathapuram girl sexual torture and sexual abuse police arrest culprit