குடித்துவிட்டு அனுதினம் சண்டை.. பச்சிளம் குழந்தை பெட்ரோலால் கருக்கிய கொடூரன்.!!
Ramanathapuram child murder by Father police arrest culprit
குடும்பத்தகராறு காரணமாக தனது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி மரியா. இந்த தம்பதிக்கு கடந்த சில வருடத்திற்கு முன்னதாக திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது.
இந்நிலையில், தம்பதிகளிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. முனியசாமியும் தினமும் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்வதால், இவர்களுக்குள் தகராறு தினமும் தொடர்ந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சனைக்கு பின்னர் பெண்மணி தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தையை பிரிய மனமில்லாத முனியசாமி, குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறு மதுபோதையில் மரியாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.
இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனைவியை தாக்கிய முனியசாமி குழந்தையைப் பறித்து அதன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும், குழந்தையின் உடலில் பெட்ரோலை ஊற்றி எரித்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முனியசாமியை கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Ramanathapuram child murder by Father police arrest culprit