மானாமதுரை: கள்ளக்காதலால் கொலைவழக்கில் சிக்கிய உறவினர்கள்.. ஆத்திரத்தில் அடுத்தடுத்து சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலனுடன் சென்ற பெண்மணியை மீட்டு வர சென்று, கொலை வழக்கில் கைதானவர்கள் அடுத்தடுத்து கொலை செய்ய பயங்கரம் அரங்கேறியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நயினார்கோவில் மனச்சனேந்தல் கிராமத்தை சார்ந்தவர் சத்யேந்திரன் (வயது 30). சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை கிளங்காட்டூர் பகுதியை சார்ந்த வளர்மதி (வயது 24) என்ற பெண்ணிற்கும் இடையே கடந்த 7 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இவர்கள் இருவருக்கும் நிவேதா என்ற 6 வயது மகளும், ஆகாஷ் என்ற 3 வயது மகனும் உள்ளனர். சத்யேந்திரன் திருச்சியில் உள்ள சின்னக்கடை பகுதியில் தேநீர் கடையில் பணியாற்றி வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வார். 

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி வளர்மதி மாயமான நிலையில், பல இடங்களில் அவரை தேடியும் காணவில்லை. விசாரணையில், வளர்மதிக்கும் - மனச்சனேந்தல் பகுதியை சார்ந்த வேல்ராஜ் என்ற 20 வயது வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் பழக்கம் ஏற்பட்டு, ஊரினை விட்டு சென்றது தெரியவந்துள்ளது. 

இவர்கள் இருவரும் திருச்சி தாராநல்லூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். கள்ளக்காதல் ஜோடியை சத்தியேந்திரன் மற்றும் வளர்மதியின் சகோதரர் ராமையா ஆகியோர் தேடி வந்தனர். இவர்கள் இருவரும் திருச்சியில் இருக்கும் தகவல் இறுதியில் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, சத்தியேந்திரன், அவரது தம்பி பிரபு, ராசையா, உறவினர்கள் காட்டுராஜா மற்றும் தனசேகர் ஆகியோர் திருச்சிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். வீட்டில் இருந்தே வேல்ராஜை சரமாரியாக அடித்து நொறுக்கிவிட்டு, வளர்மதியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். 

மேலும், படுகாயமடைந்து இருந்த வேல்ராஜை அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி வேல்ராஜ் உயிரிழந்தார். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருச்சி காவல் துறையினர், சத்தியேந்திரன் மற்றும் பிரபு உட்பட 6 பேரை கைது செய்தனர்.

இந்த விஷயம் காட்டுராஜா மற்றும் தனசேகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, வளர்மதியை சந்தித்து உன்னால் தான் கொலை வழக்கில் நாங்கள் சிக்கியிருக்கிறோம் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தன்று, இதனைப்போன்று தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த காட்டுராஜா வளர்மதியை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். 

இந்த சம்பவத்தில் வளர்மதி உயிரிழந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த மானாமதுரை துணை காவல் ஆணையர் சுந்தரமாணிக்கம் தலைமையிலான காவல் துறையினர், வளர்மதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து காட்டுராஜா மற்றும் தனசேகரை கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Affair Woman and his Affair boy Murdered by Relations


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->