தமிழகம் | 5 தலைமுறையை கண்ட தாயின் பிறந்தநாள்.! மொத்த குடும்பமும் சேர்ந்து வைத்த விருந்து.!
Ramanathapuram 80 th birthday celebration vimaladevi
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை சேர்ந்தவர்கள் சுப்புராம், விமலாதேவி. இவர்களுக்கு 8 மகள்களும்,2 மகன்களும் உள்ளனர்.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சுப்புராம் இயற்கை எய்தினார். கணவரின் இறப்புக்கு பின் விமலாதேவி தன் மகன்கள், மகள்களின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.
தற்போது 80 வயதாகும் விமலாதேவி, தன் குடும்பத்தின் 5 தலைமுறையை கண்ட பெருமையை பெற்றவர். தற்போது அவரின் மகன்கள், மகள்களைத் தொடர்ந்து பேரன்கள், கொள்ளு பேரன்கள் என 12 பேர் உள்ளனர்.
இந்நிலையில், விமலாதேவியின் 80 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அவரின் குடும்பத்தார் முடிவு செய்து, அவருக்கு 80 வகையான இயற்கை உணவுகளை உறவினர்கள் அனைவரும் கூடி சமைத்து, வாழ்த்துக்களை சொல்லி, விமலாதேவியிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர் .
இந்த நவீன காலத்தில் முதியோர்களை பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடும் பிள்ளைகள் மத்தியில், 5தலைமுறையை கண்ட தாயின் உன்னதத்தை போற்றும் வகையில், பிறந்தநாளை கொண்டாடியது ராமநாதபுர மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Ramanathapuram 80 th birthday celebration vimaladevi