இந்தியன் வங்கி கோபால கிருஷ்ணன் மறைவு.. மருத்துவர் இராமதாசு இரங்கல்..! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரும், யாதவ மகாசபையின் தலைவருமான கோபால கிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தமிழ்நாடு யாதவ மகாசபையின் தலைவர் என்ற முறையில் அச்சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர். எனது நண்பர்களில் ஒருவர். என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து சமுதாய ஆலோசனைக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டவர். சமூகநீதி மற்றும் மது ஒழிப்புக்காக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட பல்வேறு இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்தவர் கோபாலகிருஷ்ணன் ஆவார்.

இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் யாதவ மகாசபையினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramadoss Regret to Gopala Krishnan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->