இராணுவ வீரர் பழனி வீரமரணம்.. மருத்துவர் இராமதாசு, கமலஹாசன் இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், " லடாக் எல்லையில் சீனப் படைகளுடன் நடைபெற்ற சண்டையில் இந்தியப் போர்ப்படையின் கர்னல்  உள்ளிட்ட மூவர் வீரச்சாவடைந்தனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

வீரச்சாவடைந்த இந்திய வீரர்களில் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனியும்  ஒருவர் ஆவார். பழனியின் வீரம் போற்றத்தக்கதும், பாராட்டப்பட வேண்டியதுமாகும். 

அவரது வீரத்தையும், தியாகத்தையும் இந்தியா எப்போதும் நினைவில் கொண்டிருக்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த போர்ப்படை வீரர் பழனி உள்ளிட்ட 3 வீரர்களின் வீரச்சாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்..

மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், " எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramadoss and Kamal Hassan regret to Army Officer Palani Passed away


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->