மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நடவடிக்கை.. நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு.!!
Rajinikanth wrote letter for Ramesh Pokhriyal about CICT
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குனராக உதவிப் பேராசிரியர் நிலையிலுள்ள பதவிக்கு அயல்பணி முறையில் நியமனம் செய்யப்பட்டது. இதன் மூலமாக செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தமிழாராய்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்திற்கு இணையான அமைப்பு ஆகும். இதன் முதல் இயக்குனராக ஆர்.சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டார். இது குறித்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குனராக ஆர். சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு ரஜினிகாந்த் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளர்.
மேலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எடுத்துள்ள முயற்சிக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதமும் எழுதியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Rajinikanth wrote letter for Ramesh Pokhriyal about CICT