தயாராகிறார் ரஜினி... எல்லாம் ரெடி.. இனிமே சரவெடிதான்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான பணிகள் நிறைவுபெற்று செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் மருத்துவர் ஜெயகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினியின் பிறந்தநாளையொட்டி ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பல நலப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தாம்பரம் அஸ்தினாபுரம் பகுதியில் இருக்கும் தனியார் மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக 2 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் மருத்துவர் ஜெயகிருஷ்ணன் மரக்கன்றுகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார். பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், " ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பல நலத்திட்ட பணிகள் செய்து வருகிறோம். 

தாம்பரத்தில் உள்ள சிட்லபாக்கம் ஏரி, பெருங்குளத்தூர் ஏரி போன்றவை ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தூர்வாரி கொடுக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் துவங்கியுள்ளதால் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான நலத்திட்ட உதவிகள் செயல்பாட்டில் இருக்கிறது. ரஜினி விரைவில் கட்சி குறித்து அறிவிப்பார். கட்சிக்கான பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது. ரஜினியை விமர்சனம் சொல்வபவர்கள் தொடர்பாக கருத்து கூற நான் விரும்பவில்லை " என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth shortly came Tamilnadu Politics 27 October 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->