ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் நன்றி - விருதுபெற்ற ரஜினிகாந்த் நெகிழ்ச்சி உரை.!
Rajinikanth Receives Dadasaheb Phalke Award and Thanks to Fans and Tamil Peoples Director K Balachandar
தாதா சாகேப் பால்கே விருதை வழங்கிய மத்திய அரசுக்கும், எனது ரசிகர்பெருமக்களுக்கும் நன்றி என ரஜினிகாந்த் பேசினார்.
திரையுலகில் நீண்ட காலம் புகழோடு பணியாற்றும் நபர்களுக்கு கௌரவம் செய்யும் வகையில், மத்திய அரசின் சார்பில் வருடம்தோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும். மத்திய அரசின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் விருதை, இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் அமிதாப்பச்சன் முன்னதாக பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் கோலோச்சி இருந்த மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன், இயக்குனர் பாலசந்தர் ஆகியோரும் இவ்விருதை பெற்றுள்ளனர். தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு, கடந்த 2019 ஆம் வருடம் பால்கே வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அக். 25, 2021 இன்று டெல்லியில் தேசிய விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், எல். முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விருதை பெற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், " தாதா சாகேப் பால்கே விருதை வழங்கிய மத்திய அரசுக்கும், எனது ரசிகர்பெருமக்களுக்கும் நன்றி. இந்த விருதை என்னை திரைத்துறையில் அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் கே. பாலசந்தர் சாருக்கு சமர்ப்பிக்கிறேன். என்னை அடையாளம் காண்பித்த நண்பர் பகதூருக்கும் நன்றி. என்னை வாழ வைத்த தெய்வமான தமிழக மக்களுக்கும் நன்றி" என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Rajinikanth Receives Dadasaheb Phalke Award and Thanks to Fans and Tamil Peoples Director K Balachandar