மொத்தமாக கூடாரத்தை காலி செய்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.. கதவை திறந்த அதிமுக.!
Rajini Makkal Mandram Supporters Join ADMK 5 March 2021
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 5 மாநிலங்களில் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை களம்காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம், இறுதி நேரத்தில் அவரின் உடல்நிலை காரணமாக கானல் நீராகிப்போனது. ஆனால், அவர் தரப்பில் இருந்து இறுதிக்கட்ட ஆதரவு அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படலாம் என இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த ரஜினியின் ஆதரவாளர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் மாற்று கட்சிகளில் இணைய தொடங்கினர். இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Rajini Makkal Mandram Supporters Join ADMK 5 March 2021