கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரஜினி செய்த உதவி.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின்,  நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் போன்ற பல்வேறு மாவட்டங்கள் கஜா புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளானது. அதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தது. இன்னும் சிலரது வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தது. இதனால், அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி மற்றும் பொருட்களை வழங்கி வந்தார்கள்.

அந்த வகையில், வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீடுகளை கட்டித் தர நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். 

அதன் அடிப்படையில், நாகை மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கடும் பணி நடைபெற்றது. 

இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை வழங்கினார். பயனாளர்களை இன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்து, வீடுகளுக்கான சாவியை கொடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini gave home for affect in kaja cyclone


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->