இதெல்லாம் ஒரு கொள்கையா.?! வீரமணியை கிழித்து தொங்கவிடும் அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


பால்வளத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி, "ஹிந்துக்களை அழிக்க வேண்டும் என்பது தான், தி.க., தலைவர் வீரமணியின் கொள்கை,'' என குற்றம் சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில், "மழை வேண்டி, நாங்கள் யாகம் நடத்துகின்றோம். ஆனால், குறை கூறுபவர்கள், குடிநீர் பிரச்னையை பெரிதாக்கி, ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருக்கும் தண்ணீரையே, தமிழகத்திற்குள் எடுத்து வர விட மாட்டோம் என திமுகவினர் தடுக்கின்றனர்.

Image result for ராஜேந்திர பாலாஜி seithipunal

இவர்களால் எப்படி கர்நாடக தண்ணீரை கேட்க இயலும்?இவர்கள் சென்னை மக்கள், நீர் இல்லாமல் கஷ்டப்பட வேண்டும் என, செயல்படுகின்றனர். கடவுள் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம் அதற்காக தான் யாகம் நடத்துகின்றோம். 

தி.க., வீரமணி போன்றோர்க்கு எங்களை கிண்டலடிப்பது, கேலி பேசுவது என்பது வாடிக்கையாகி விட்டது. தி.க.,வுக்கு கொள்கை என்ற ஒன்று இருக்கிறதா? அல்லது வீரமணிக்கு தான் இருக்கிறதா? ஹிந்துக்களை அழிக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய கொள்கை" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajendhirapalaji says about veeramani k


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->