விஜயகாந்திற்கு புகழாரம் சூட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!! தேமுதிகவுடன் இணைந்து பிரச்சாரம்!! - Seithipunal
Seithipunal


அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக தேமுதிகவைச் சேர்ந்த அழகர்சாமியை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் "எளிமையான, தூய்மையான ஆட்சியை பிரதமர் மேற்கொண்டு வருகிறார். மன்மோகன் சிங் ஆட்சியின்போது மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால், பதில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகின்றனர். 2011ஆம் ஆண்டு தேமுதிக அதிமுக கூட்டணி சாதனையாக இருந்தது. எதிர்க்கட்சி இல்லாத நிலையில் இந்த கூட்டணியை உருவாக்கியது.

இந்த கூட்டணி தொடர வேண்டும். மிகவும் தேசப் பற்று உடையவர் விஜயகாந்த். நல்ல கருத்துக்களை அவருடைய படத்தில் காண இயலும். எம்ஜிஆரை போல சாமானிய வேட்பாளரை தான் விருதுநகர் தொகுதிக்கு அறிவித்துள்ளார். 

காங்கிரஸ் வேட்பாளராக மாணிக் தாகூர் போட்டியிடுகிறார். அவர் பணக்காரர். சாமானியர்கள் சாம்ராஜ்யத்தை சரித்ததாக சரித்திரமே உண்டு. இந்த எளிமையான அழகர்சாமி நிச்சயம் மாணிக் தாகூர் போன்றோரை தோற்கடிப்பார்.

காங்கிரஸ் கட்சிக்காரர்களே அவரை துரத்தி விடுவார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பரமசிவன் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர். ஓட்டுக்கு பணம் கொடுப்பார்.

தேர்தலில் தோற்று விட்டால் மீண்டும் வாக்காளர்களின் வீட்டுக்கு வந்து கொடுத்த பணத்தை கேட்பார். அவர் பணத்துக்கு வட்டி போட்டு வசூலிப்பார்" என அவர் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajendhira Balaji Mla speech in virudhunagar


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->