தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. மகிழ்ச்சியில் மக்கள்.!!
rain in thoothukudi
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாலக்கோட்டில் கடந்த அரை மணி நேரமாக மழை பெய்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த ஒரு மணி நேரமாக மழை பெய்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்களுக்கு சற்று குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.