தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை..! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராயப்பேட்டை, மெரினா, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம் போன்ற இடங்களில் காற்றுடன் மழை பெய்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது.

Image result for rain seithipunal

இதை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக மழை நின்றிருந்தது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பாலுசெட்டிசத்திரம், செவிலிமேடு, ஓரிக்கை, வாலாஜாபாத் உள்ளிட்ட ஊர்களில் மீண்டும் மழை பெய்ததால் விவசாயம் செழிக்கும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain in tamilnadu report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->