3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
rain in tamilnadu for 3 districts
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நாகை,புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் மிதமான மழையும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு பலத்த காற்று வீசும் என்பதால், குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
rain in tamilnadu for 3 districts