பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
rain in tamilnadu
வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல்,திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதில், கோவை, நீலகிரி,திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் உதகை, அவலாஞ்சி, கெட்டி உள்ளிட்ட இடங்களில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குந்தா பாலம், தேனி மாவட்டம் பெரியகுளம், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உள்ளிட்ட இடங்களில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.