கொட்டி தீர்த்து, மக்களை குளிர்வித்த பருவமழை! மகிழ்ச்சியில் விவசாயிகள்! எங்கு தெரியுமா?
Rain in Mayiladuthurai
மயிலாடுதுறை 16.10.19 : மயிலாடுதுறை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. பருவமழை துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. பருவமழை துவங்குவதற்கு முன்னரே கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை சுற்று வட்டாரப்பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், செம்பனார்கோவில், தரங்கம்பாடி, திருக்கடையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. மயிலாடுதுறை பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் காலை 10மணி முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. பருவமழை துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செய்தியாளர் : மணி