விட்ட விடுமுறைக்கெல்லாம் சேர்த்து வைத்த ஆப்பு..! மாணவர்கள் அப்செட்..!
rain holiday compensate in saturday
தமிழகத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த 2 ஆம் தேதி முதல் கனமழை வெளுத்து வாங்கியது, இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களுக்குக் கடந்த 2 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் அளிக்கப்பட்ட விடுமுறை இந்த மாதத்திற்குள் ஈடுசெய்யப்படும் என்றும் அதன் தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
அந்த வகையில், டிசம்பர் 2 ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 21ம் தேதி ( சனிக்கிழமை) சென்னையில் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் அறிவித்துள்ளார்.
English Summary
rain holiday compensate in saturday