லாரி ஓட்டுனருக்கு ஏற்பட்ட விபரீதம்... ஓடும் லாரியில் ஏறி காவலர் அசத்தல்..!    - Seithipunal
Seithipunal


சண்முகம் என்னும் நபர் ரயில்வே துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று அவரது குடும்பத்துடன் சேலம், ஓமலூர் தாலுக்கா அலுவலகம் அருகே இருக்கும் மேம்பாலம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த மேம்பாலத்தின் பக்கத்தில் லாரி ஒன்று அவர்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்துள்ளது. 

இதை தொடர்ந்து, சிறிது நேரம் நேரே வந்து கொண்டிருந்த அந்த லாரி திடீரென பின்னோக்கி செல்வதைச் காவலாளர் சண்முகம் பார்த்திருக்கிறார். அப்போது தான், அந்த லாரி ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டு லாரி கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம் உடனே, அவரது காரை நிறுத்தி கீழே இறங்கினர், பின்னர் ஓடிக் கொண்டிருந்த லாரியில் ஏறி லாரியை நிறுத்தியுள்ளார்.

அதன் பின், அந்த லாரி ஓட்டுனரின் உயிரைக் காப்பாற்றிய  சண்முகம் அவரை 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அந்த லாரியின் பின்னால் வாகனங்கள் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

railway staff saves lorry driver from running lorry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->