மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமலை சந்தித்த பி.வி.சிந்து..!
p.v.sindhu meets kamal in chennai
சமீபத்தில் நடந்த 25வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னைக்கு வருகை தந்த பிவி சிந்து எல்டாம்ஸ் சாலையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி சந்திப்பு குறித்த கேள்விக்கு இருவேறு சித்தாங்தங்கள் கொண்ட நாட்டு தலைவர்கள் சந்திப்பது வரவேற்க தக்கது என தெரிவித்தார். மேலும், சீன அதிபரின் வருகையை வெற்றிவிழாவாக கொண்டாடுவது நாட்டின் கடமை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கமலைத் தொடர்ந்து பேசிய பிவி சிந்து, 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள பேட்மிட்டன் போட்டிக்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருவதாகவும், அதில் தங்கம் வெல்வது தான் தனது இலக்கு என்றும் தெரிவித்தார்.
English Summary
p.v.sindhu meets kamal in chennai