பெண்களிடம் அத்துமீறிய காமுகன் விவகாரத்தில், வெளியான பேரதிர்ச்சி தகவல்.. பாதிக்கப்பட்ட பெண்கள், ஆண்கள்.!!
Puthukottai youngser arrest police investigation
சென்னையில் உள்ள புதுப்பாக்கம் பகுதியை சார்ந்த பெண்ணொருவர், இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் மின்னஞ்சல் மூலமாக புகார் வந்துள்ளது. இந்த புகாரில், மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு வைத்திருந்த நிலையில், இந்த கணக்கில் குறித்த மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டுவதாக கூறியுள்ளார்.
மேலும், பணத்தை கொடுக்காத பட்சத்தில் இணையத்தில் விட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து இது குறித்து புகார் அளித்த நிலையில், இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதுமடம் பகுதியை சார்ந்த சிவகுமார் (வயது 23) என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இவன் கணிப்பொறி அறிவியில் பட்டதாரியாக இருந்து வரும் நிலையில், இவனை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியவந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு துவங்கிய சிவகுமார் பெண்கள் பெயரில் போலிக்கணக்குகளை துவங்கி, கொரோனா தொடர்பான தகவல் மற்றும் விழிப்புணர்வை பகிர்ந்துள்ளான்..
பின்னர் பெண்களிடம் நட்பாக பழகி வந்த நிலையில், தனது தகவலை பகிர்ந்து வலைதள பக்கத்தில் ஆபாசமாக புகைப்படத்தை சித்தரித்து பதிவு செய்து வந்துள்ளான். பதிவு செய்த புகைப்படத்தை வைத்து பெண்களை மிரட்டியும் வந்துள்ளான். இதனைப்போன்று பேசி வந்த சென்னை புதுப்பாக்கம் பகுதியை சார்ந்த நபரின் மனைவியிடம் போலி இன்ஸ்டா கணக்கில் மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது.
சிவகுமார் சென்னையை சார்ந்த பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டிய நிலையில், அவர் வசித்து வரும் நகரில் போஸ்டர் அடித்து ஆபாச படத்தை பதிவு செய்வேன் என்றும் மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன பெண்மணி தனது கணவரிடம் விஷயத்தை தெரிவித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிவகுமாரிடம் இருந்து அலைபேசியை பறிமுதல் செய்ததில், சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச புகைப்படம் இருந்தது தெரியவந்துள்ளது. இதுபோல பெண்களின் பெயரில் ஆண்களிடமும் மிரட்டல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Puthukottai youngser arrest police investigation