காதலனை கட்டிப்போட்டு பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. திருச்சி நெடுஞ்சாலையில் அரங்கேறிய பயங்கரம்...!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர், தனது காதலருடன் பணி முடித்து இரவு நேரத்தில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டுக்குச் செல்வது வழக்கம். இந்த சமயத்தில், அங்குள்ள மணிகண்டம் பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையோரம் புதர் மண்டி இருக்கும் பகுதியில், இவர்கள் தனிமையை கழித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் பணி முடித்து அந்த பெண், தனது காதலருடன் வாகனத்தில் புறப்பட்டு வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மணிகண்டம் பகுதியில், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளனர். இந்த விஷயத்தை அவ்வழியாக சென்ற மூன்று பேர் கவனித்துக் கொண்ட நிலையில், இவர்களை தொடர்ந்து காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். 

காதல் ஜோடிகள் தன்னை மறந்த நிலையில் இருக்கவே, காதல் ஜோடிகள் மீது பாய்ந்த காமுகன் காதலனை கத்திமுனையில் கட்டிப் போட்டு, காதலன் முன்னிலையிலேயே பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுமட்டுமல்லாது காதலர்கள் அணிந்திருந்த நகை மற்றும் பணம் போன்றவற்றையும் பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

காதலர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக குடும்பம் இருப்பதால், இந்த விஷயம் வெளியே தெரியும் பட்சத்தில் பிரச்சினை வரும் என்று கூறி தனித்தனியாக விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் உண்மையை கூறிய நிலையில், தங்களுக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீருடன் விபரித்துள்ளனர். 

இதனையடுத்து, அங்குள்ள பகுதிக்கு சென்ற காவல்துறையினர், அங்கு ஏதேனும் ஆயுதம் இருக்கிறதா? என்பது குறித்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் வந்துள்ளனர். இவர்களை பிடித்து விசாரித்ததில் திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த முருகன், நந்தகுமார், ஹேமராஜ் என்பது தெரியவந்துள்ளது. 

இவர்கள் மூவரும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதரில் பதுங்கியிருந்து வாகன ஓட்டிகளை தாக்கி பணம் பறிக்கும் கொள்ளையர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இருசக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் வரும் நபர்கள் காரை நிறுத்தும் பட்சத்தில், அங்கே நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்ததும், காதல் ஜோடிகளாக இருக்கும் பட்சத்தில் கத்தியை காட்டி நகை, பணம் போன்றவற்றை மிரட்டி பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. 

இதனைப்போன்றே தனிமையில் வரும் காதல் ஜோடிகளை பலாத்காரம் செய்து, கொள்ளை அடிப்பதும் இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும், பலரும் அவமானம் கருதி இந்த கொள்ளையர்கள் மீது புகார் அளிக்காத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவத்தை கூறாமல் பணம் மட்டும் கொள்ளை போனதாக புகார் அளித்துள்ளது தெரியவந்துள்ளது. 

இவர்களில் இருவர் வாகனத்தில் தப்பிச் செல்ல முயற்சிக்கவே, இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இருவருக்கும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இவர்களை மீட்ட காவல்துறையினர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், தனிமையில் செல்லும் காதல் ஜோடிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் அல்லது தனிமையில் பாதுகாப்பு இல்லாத இடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puthukottai girl gang rapped by thief police arrest culprits


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->