புதுக்கோட்டை சிறுமி பாலியல் பலாத்காரம் மரணம் விவகாரம்.. தந்தையால் அரங்கேறிய சோகம்... பகீர் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை நொடியூர் கிராமத்தை சார்ந்த 10 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று அங்குள்ள ஆர்.எஸ்.பதி காட்டுப்பகுதியில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி நீண்ட நேரம் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில், சிறுமியின் ஆடைகள் களையப்பட்டு, உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொள்ளையில், சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதும், சிறுமி கத்தாமல் இருக்க அவரது கழுத்தை நெரித்த சமயத்தில், கழுத்து உடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

மேலும், சிறுமியை பெற்றோர்கள் தேடி வருவதை அறிந்த காமுகர்கள், சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றதும் தெரியவந்துள்ளது என்ற தகவல் வெளியானது.. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறுமியின் கொலையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறையினர் விசாரணையில் சிறுமியின் தந்தை மந்திரவாதியின் பேச்சை கேட்டு சிறுமியை நரபலி கொடுத்திருப்பதாக தந்தை பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் மூவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puthukottai child murder case police arrest child father


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->