தந்தைக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யும் மகள்.. புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாராப்பூர் கிராமத்தை சார்ந்தவர் மணி. இவர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள கணேஷ் நகரில் குடியிருக்கும் நிலையில், இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.

கடந்த 5 வருடத்திற்கும் மேலாக மணி தள்ளுவண்டி மூலமாக குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளுவண்டி தொழில் இல்லாமல் வறுமை வாட்டி வதைத்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தளர்வுகளுடன் அமலாகிய ஊரடங்கை அடுத்து, அவ்வப்போது ஊதுபத்தி மற்றும் காய்கறி பொருட்களை குடோனிற்கு எடுத்தும் செல்லும் பணி மூலமாக பிழைப்பை நடத்தி வந்துள்ளார்.

மணிக்கு தள்ளுவண்டியை தள்ள மிகவும் சிரமம் ஏற்பட்ட நிலையில், மணியின் நிலையை உணர்ந்துகொண்ட அவரின் 11 வயது மகள் சுபபாரதி, தந்தையின் சுமையை குறைக்கும் பொருட்டு மாலை நேரத்தில் தந்தையுடன் சென்று உதவியாக தள்ளுவண்டியை தள்ளி வருகிறார்.

இது குறித்து சுபபாரதி பேசுகையில், புதுக்கோட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் நான் படித்து வருகிறேன். எனது தந்தை தள்ளுவண்டி தள்ளி கூலித்தொழில் செய்து வருகிறார். தினமும் ஊதுபத்தி மற்றும் காய்கறி போன்ற பொருட்களை குடோனில் இருந்து கடைகளுக்கு கொண்டு சென்று வழங்குவார். 

இதில் கிடைக்கும் வருமானத்தை வீட்டிற்கு கொண்டு வந்து தருவார். இப்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்ற காரணத்தால் மாலை நேரங்களில் தள்ளுவண்டியை தள்ள இயலாமல் அப்பா சிரமப்படக்கூடாது என்ற காரணத்தால் அவருடன் நானும் சென்று உதவியாக இருக்கிறேன் என்று மகிழ்ச்சிப்பட தெரிவித்தார்.

மணி இது குறித்து பேசுகையில், கடந்த 5 வருடமாகவே நான் தள்ளுவண்டி வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். ஊரடங்கு காரணமாக நாளுக்கு ரூ.200 கூட வருமானம் இல்லை. இதனால் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனக்கு தள்ளுவண்டி தள்ள இயலாததால், எனது மகள் எனக்கு மாலை வேளையில் தினமும் உதவி செய்கிறார். நாளுக்கு 4 கிமீ தூரம் என்னுடன் தள்ளுவண்டியை தள்ளி மகிழ்ச்சியுடன் உதவி செய்து வருகிறார் என்று நெகிழ்வுடன் கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puthukottai child girl help father


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->