சம்பவம்: வரதட்சணை கொடுமை செய்த மாமியார்.. கொளுத்திவிட்ட மருமகள்..!!
Pudukkottai women murder by son wife due to dowry
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவர் பழனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவியின் பெயர் பிரதீபா. இவர் இருவருக்கும் திருமணம் முடிந்து சில வருடங்கள் ஆகும் நிலையில், இருவரும் இன்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
ப்ரதீபாவிடம் அவரது மாமியார் ராஜம்மாள் வரதட்சணை கொடுமை செய்து வந்ததாக தெரியவருகிறது. பலமுறை ப்ரதீபாவிடம் வரதட்சணை பணம் கேட்டும், பிரதீபா எந்த விதமான பதிலும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், மருமகள் வரதட்சணை கொடுக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரவே, பிரதீபா தனது மகனை தன் கட்டுப்பாட்டில் வைத்தாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்து காணப்பட்ட பிரதீபா, மாமியாரின் செயலால் விரக்தியடைந்து காணப்பட்டுள்ளார்.
இதனைப்போன்று இன்று இவர்களுக்குள் வழக்கம்போல தகராறு ஏற்பட்டு முடிந்து, ராஜம்மாள் தூங்க சென்றுள்ளார். தூங்கிக்கொண்டு இருந்த ராஜம்மாளின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ராஜம்மாள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காவல் துறையினரின் விசாரணையில் மேற்கூறிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Pudukkottai women murder by son wife due to dowry