மொழிதெரியாத மாநிலத்திற்கு மனைவியை அழைத்துச்சென்று கொடுமை செய்யும் கணவன்.. பெண் கண்ணீர் கோரிக்கை.!
Pudukkottai Woman Want Help to Get Back Maharashtra to Tamilnadu Husband Torture
தமிழகத்தைச் சார்ந்த கர்ப்பிணி பெண் கணவரால் மகாராஷ்டிரத்தில் துன்புறுத்தப்படுவதாகவும், அவரை மீட்டுத்தரக் கோரியும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒலியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி வெள்ளையம்மாள். இந்த தம்பதிக்கு 23 வயதுடைய பவித்ரா என்ற மகள் இருக்கிறார். பவித்ராவுக்கும், சிவகங்கை மாவட்டத்திலுள்ள முசுந்திரம்பட்டியை சார்ந்த முத்துச்செல்வன் என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ராய்காட் பகுதியில் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்த முத்துச்செல்வன், திருமணத்திற்கு பின்னர் மனைவியை தன்னுடன் அழைத்து செல்லவில்லை. அவ்வப்போது அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே மனைவியை வந்து சந்தித்து சென்றுள்ளார்.
முதலில் பெண் குழந்தை பிறந்த நிலையில், தாய் வீட்டிற்கு வந்திருந்த பவித்ரா மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். தன்னை அழைத்துச் செல்வதற்கு முத்துச்செல்வன் தாமதம் செய்ததால் பவித்ராவுக்கு சந்தேகம் ஏற்பட, தாய் வீட்டில் இருந்த உனக்கு எப்படி கர்ப்பம்? வாய்ப்பு என வீட்டிற்கு வந்த விஷயத்தை மறுத்து முத்துச்செல்வன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கர்ப்பிணியான பவித்ராவை ஒரு வயது குழந்தையுடன் முத்துச்செல்வன் மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முத்துச்செல்வனுக்கும், பவித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், பவித்ராவை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
மேலும், அவரை வீட்டில் பூட்டி வைத்து கொடுமை செய்துள்ளார். இதனால் பயந்து போன பவித்ரா மொழி தெரியாத மாநிலத்தில் உதவி கேட்க இயலாமல் தவித்த நிலையில், தந்தையின் செல்போனுக்கு வீடியோகால் மூலம் தொடர்புகொண்டு விசயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ ஆதாரத்துடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது மகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பவித்ராவின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும் பவித்ராவை தமிழகம் கொண்டுவர உதவி செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pudukkottai Woman Want Help to Get Back Maharashtra to Tamilnadu Husband Torture