விராலிமலை: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. 3 பேர் பரிதாப பலி.! - Seithipunal
Seithipunal


சாலை விபத்துகள் என்பது இன்றளவும் தொடர்கதையாகியுள்ளது. சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது ஓட்டுனரின் அலட்சியத்தாலோ அல்லது வாகனத்தின் பழுது காரணமாகவோ திடீர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. 

சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் சாலை விபத்துகள் என்பது அங்குள்ளவர்களுக்கு புதியதாக இருக்காது. ஏனெனில் பல்வேறு விபத்துகளை அவர்கள் பார்த்துவிட்டார்கள். கடந்த சில மாதங்களாக விபத்துகள் ஏதும் ஏற்படாமல் இருந்த நிலையில், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று விபத்து ஏற்பட்டுள்ளது. 

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை வடகாட்டுப்பட்டி பகுதியில் கார் மதுரை நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளது. இந்நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையோர பள்ளத்தில் பாய்ந்துள்ளது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த விராலிமலை காவல் துறையினர் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், விபத்தில் பலியானவர்கள் யார்?. எங்கிருந்து எங்கு சென்றுகொண்டு இருந்தார்கள்? என்பது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Viralimalai Car Accident 3 Persons Lost Live


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->