போலீஸ் ஸ்டேஷன் எங்களுக்கு மாமியார் வீடு.. காவல் நிலையத்தில் கண்ணீர் கதறல்..!! - Seithipunal
Seithipunal


டிக் டாக் விடீயோக்களில் பல இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உருவாகி வரும் நிலையில், பல மூளைச்சூடு உள்ளவர்களின் காரணமாக பல பிரச்சனைகள் எழுகிறது. மேலும், தாங்கள் பெரிய புத்திசாலிகள் மற்றும் தைரியசாலிகள் என்ற போலி போர்வையில் டிக் டாக் போராளிகளாக உலா வரும் நபர்கள் காவல்துறையினரை வசைபாடியும் வருகின்றனர். 

இதில் சென்னை பகுதியில் வசித்து வரும் புல்லிங்கோக்கள் காவல் நிலையத்திற்கு சென்று வருவது தங்களுக்கு பழக்கமான ஒன்று என்பதை போல வசனம் மற்றும் பாட்டுகளுடன் காவல் நிலையத்திற்கு அருகே வீடியோ பதிவு செய்து, பின்னர் காவல் துறையினரின் அன்பான கவனிப்பால் மனம் திருந்தி நல்ல விடீயோக்களை காவல் துறையினரின் முன்னிலையில் பதிவு செய்வார்கள். 

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியை சார்ந்தவன் வெற்றிவேல் மற்றும் மகேந்திரன். இவர்கள் இருவரும் அங்குள்ள செம்பட்டி விடுதி காவல் நிலையத்திற்குள் இருந்து வெளியே வருவது போல வீடியோ பதிவு செய்து பகிர்ந்துள்ளனர். மேலும், இது குறித்த வீடியோ காட்சியில் காவல் நிலையம் தங்களுக்கு மாமியார் வீடு என்பதை போலவும் வசைபாடியுள்ளனர்.

இது குறித்த வீடியோ காட்சிகளை கண்டு காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட மகேந்திரன் மற்றும் செந்தில்குமாரை கைது செய்து சிறப்பிக்க கவனித்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai tic tok video police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->