புதுக்கோட்டை: தீர்ப்புக்கு பயந்து, பாலியல் வழக்கில் சிக்கிய காமுகன் தற்கொலை.. காவல்துறை விசாரணை.!
Pudukkottai Sexual Abuse Culprit Suicide due to Fear of Case Judgement went Jail
போக்ஸோ வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர், தண்டனைக்கு பயந்து தப்பி சென்று மர்மமாக உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவன் திருநாவுக்கரசு (வயது 40). இவன் கடந்த 2019 ஆம் வருடத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காமுகனை சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஜாமினில் தற்போது திருநாவுக்கரசு வெளியே இருந்துள்ளான். ஜாமின் தேதி முடிந்ததும், நீதிமன்றத்திற்கு சென்றுள்ளான்.
இதன்போது, விசாரணையில் திருநாவுக்கரசுக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்ற செய்தி தெரியவந்ததால், திருநாவுக்கரசு அங்கிருந்து தப்பி சென்றுள்ளான். இதனையடுத்து காவல் துறையினர் திருநாவுக்கரசை தேடி வந்த நிலையில், அங்குள்ள புளியம்பட்டி பகுதியில் உள்ள மதுபான கடையில் உயிரிழந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துளளது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அன்னவாசல் காவல் துறையினர், திருநாவுக்கரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pudukkottai Sexual Abuse Culprit Suicide due to Fear of Case Judgement went Jail