நேர்மையான அதிகாரிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கிராம மக்கள்.. புதுக்கோட்டை செரியலூரில்நெகிழ்ச்சி.!!
Pudukkottai Seriyalur Village VAO Birthday Celebration by Public he is Good Person Peoples Says
நேர்மையாக பணியாற்றி வரும் கிராம நிர்வாக அதிகாரியின் பிறந்தநாளை, பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி சிறப்பித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செரியலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில், கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் அருள் வேந்தன். இவர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரும் கிராம மக்களிடம் அன்போடும், பண்போடும் நடந்து கொள்வது வழக்கம்.
மேலும், பொதுமக்கள் சார்பாக வைக்கப்படும் கோரிக்கைகயை எந்தவிதமான இலஞ்ச பணமும் இன்றியும் நிறைவேற்றி தந்துள்ளார். இதனால் அப்பகுதி ஊர் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு இருக்கிறார். இந்நிலையில், அருள் வேந்தனின் பிறந்தநாள் தினமும் வந்துள்ளது.
இதனையடுத்து, இலஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணியாற்றும் தங்களது ஊர் அதிகாரியை கௌரவப்படுத்தும் வகையில், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரது பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
அவரது பிறந்த நாளான இன்று கேக் வாங்கி வந்து அவரை வெட்ட சொல்லி மகிழ வைத்தனர். கிராம நிர்வாக அதிகாரியான அருள் வேந்தனும், மனமகிழ்ச்சியுடன் கேக்கை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தளித்து, தானும் சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pudukkottai Seriyalur Village VAO Birthday Celebration by Public he is Good Person Peoples Says