ஜல்லிக்கட்டு காளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ராவணன் காளை, பாம்பு கடித்து உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


காவல் ஆய்வாளர் அனுராதாவின் புகழ் பெற்ற ராவணன் காளை பாம்பு கடித்து மரணம் அடைந்துள்ள சோகம் அரங்கேறியுள்ளது. 

புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுராதா. இவர் ராவணன் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்துள்ளார். கடந்த வருடம் அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற காளையாகவும் ராவணன் காளை இருந்துள்ளது. 

ராவணன் காளையை அனுராதா மற்றும் அவரது சகோதரர் மாரிமுத்து கடந்த மூன்று வருடங்களாக வளர்த்து வந்துள்ளனர். தற்போது 9 வயதாகும் ராவணன் காளை, கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் சோழகம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டுள்ளது. 

இதன்பின்னர், ராவணன் காலை மாயமாகிய நிலையில், இதனை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. இந்நிலையில், அங்குள்ள தச்சங்குறிச்சி பகுதியில் உள்ள கிராமத்தில் பாம்பு புற்றுக்கு அருகே உயிரிழந்து கிடந்துள்ளது. தகவல் அறிந்து காவல் உதவி ஆய்வாளர் அனுராதா மற்றும் அவரின் சகோதரர் மாரிமுத்து சென்று பார்க்கையில், பாம்பு கடித்து ராவணன் காளை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து ராவணன் காளை லாரியில் ஏற்றி ஊர்வலமாக சென்று, சொந்த ஊருக்கு கொண்டு சென்று ராவணன் காளையின் உடலை வைத்திருந்தனர். பின்னர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்து ராவணன் காளையை நல்லடக்கம் செய்தனர். ராவணன் காளையின் மறைவு காவல் உதவி ஆய்வாளர் அனுராதா மற்றும் அவரின் சகோதரர் மாரிமுத்து ஆகியோருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Ravanan Kalai Died Snake Byte


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->