புதுக்கோட்டை மாவட்ட பெண்களிடம் ஆபாசமாக போனில் பேசி வந்த காமுகன் அகப்பட்டான்... நிம்மதியில் பெண்கள்.!
Pudukkottai phone sexual torture culprit arrest by Police
புதுக்கோட்டை மாவட்டத்தினை சார்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் கடந்த சில மாதமாக மர்ம நபரொருவர், அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி, பெண்களின் உடல் அங்கத்தையும் ஆபாசமாக வர்ணித்து பேசி வந்துள்ளான்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளித்தாலும், காவல் துறையினர் மெத்தன போக்கு காட்டியுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை பகுதியை சார்ந்த திருமணம் முடியாத பெண்ணிற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது ஆசைக்கு உடன்பட வேண்டும் என்றும் கூறி ஆபாசமாக பேசி வந்துள்ளான்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உத்தரவின் பேரில் காவல் துறையினர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெற்குப்பம் பகுதியை சார்ந்த கார்த்திகேயனை கைது செய்தனர்.. இவனின் மீது 7 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pudukkottai phone sexual torture culprit arrest by Police