விசாரணைக்கு பயந்து தீக்குளித்த பெண்மணி.. இறுதி வரை போராடி பலியான பரிதாபம்.!!
Pudukkottai girl suicide attempt in Police Station passed away today
தேவையில்லாது விசாரணைக்கு அழைத்து துன்புறுத்துவதாக கூறி தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி காந்திநகர் பகுதியை சார்ந்தவர் பாண்டி என்ற ராஜேந்திரன்.
இவரது மனைவி செல்வி. பாண்டி ஏற்கனவே திருட்டு தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக செல்வி திருட்டு நகையொன்றை வாங்கி விற்பனை செய்ததாக தெரியவருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்ய கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு செல்வி அழைக்கப்பட்ட நிலையில், காவல் நிலையத்திற்கு வந்த செல்வி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
இதனைக்கண்ட காவல் துறையினர் செல்வியை மீட்டு அறந்தாங்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். உடலில் சுமார் 60 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்ட நிலையில், அறந்தாங்கி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pudukkottai girl suicide attempt in Police Station passed away today