தேர்தல் முன்விரோத மோதல்.. துப்பாக்கியை எடுத்த காவல்துறை... பரபரப்பு..!!
Pudukkottai gang fight police gun fire on sky
தேர்தல் நடைபெறும் சமயங்களில் அரசியல் கட்சிகளுக்குள் தங்களை மாறி மாறி விமர்சனம் செய்வது, கட்சி தொண்டர்கள் தாக்கி கொள்வதும் இயல்பாக நடக்கும் விஷயமாக இருக்கிறது. இதில் தேர்தல் காலங்களில் அமைதிகாத்து, அந்த பிரச்சனையை முற்றவிட்டு பல வருடங்கள் கழித்தும் முன்விரோத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
போச்சம்பட்டி பகுதியில் இருதரப்பு மோதலால் காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் சம்பவம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போச்சம்பட்டி பகுதியில் ஒரேசமூகத்திற்குள் அரசியல் ரீதியான பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இது தேர்தலில் இருந்து இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், அவ்வப்போது அடிதடி சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது. காவல்துறையினர் தகுந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து, பிரச்சனையை பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருதரப்பும் பயங்கர ஆயுதத்துடன் மோதிக்கொண்டு இருந்துள்ளனர். இதில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு கருதி கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய கோஷ்டி நபர்களை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pudukkottai gang fight police gun fire on sky