காதல் பெயரை சொல்லி சிறுமி பாலியல் பலாத்காரம்.. காமுகன் கைது.. மருத்துவமனையில் பெற்றோருக்கு அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அவரை 5 மாத கர்பிணியாக்கிய காமுகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் இலங்கை அகதிகள் முகாமில் 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். புதுக்கோட்டை செங்கைத்தோப்பு பகுதியை சார்ந்த 20 வயது காமுகன் தீனதயாளன். 

இவன் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி காதலித்து வந்துள்ளான். இந்நிலையில், சிறுமியிடம் திருமண ஆசை காண்பித்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பெற்றோர்கள் சோதனை செய்கையில், அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், காமுகனின் சுயரூபம் தெரியவந்துள்ளது. 

சிறுமியின் பெற்றோர்கள் இது தொடர்பாக புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் தீனதயாளனை கைது செய்த காவல் துறையினர், திருமயம் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Culprit Sexual abuse child girl and she is Pregnant Police Arrest Criminal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->