சிறுமியை கட்டாய திருமணம் செய்ய முயற்சி.. 42 வயது காமுகனின் கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனவயல் ஆண்டவராயபுரம் பகுதியில் 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியை, அதே பகுதியை சார்ந்த 42 வயது நபர் கட்டாய திருமணம் செய்ய முயற்சித்ததாக தெரியவருகிறது. 

இது சம்பந்தமாக காமுகன் சிறுமியின் பெற்றோரை மிரட்டி வந்த நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் சிறுமி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதன்பின்னர் விசாரணை மேற்கொண்டு, சிறுமியை கட்டாய திருமனம் செய்ய முயன்ற பாஸ்கர் என்ற காமுகனை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கை ஆலங்குடி மகளிர் காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். 

இதனையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியை கட்டாய திருமணம் செய்ய முயன்ற காமுக கொடூரனின் மீது போக்ஸோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai culprit arrest by police try to child marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->