லாரிக்கு அடியில் மாட்டிக்கொண்ட கன்னுகுட்டி... தாய் பசு நடத்திய பாசப்போராட்டம்.!
Pudukkottai Cow Rescue his baby on Lorry
லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட தனது குட்டியை காப்பாற்ற தாய்ப்பசு நடத்திய போராட்டம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழ இரண்டாம் விதி கடையில் சரக்கு இறக்குவதற்கு லாரி நின்று கொண்டு இருந்தது. இதன்போது, அவ்வழியாக தாய்ப்பசுவுடன் கன்றுக்குட்டியும் வந்துள்ளது. இந்நிலையில், தாய்ப்பசுவுடன் வந்த கண்ணுகுட்டி லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டது.
லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த கன்று குட்டியை மீட்க, தாய்ப்பசு அங்குமிங்கும் ஓடியது. இதனைக்கண்ட பொதுமக்கள் கன்றுக்குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன்போது, அந்த தாய் பசு கன்று குட்டியை மீட்பதற்கு லாரியை பல முறை சுற்றி வந்தது. அங்கு இருந்தவர்கள் பத்திரமாக கன்றுக்குட்டியை மீட்ட நிலையில், வெளியே வந்த கண்ணுக்குட்டி தாய்ப் பசுவை நோக்கி ஓடி பாசத்தினை ஆரத்தழுவி வெளிப்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pudukkottai Cow Rescue his baby on Lorry