மகளை பாலியல் பலாத்காரம் செய்து, மனைவியை கொலை செய்த காமுகனுக்கு தூக்கு.. புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்து, மனைவியை கொலை செய்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவன் முருகேசன். இவனுக்கு 3 மனைவிகள் உள்ள நிலையில், அவர்கள் மூவருக்கும் பிள்ளைகளும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், காமுகன் முருகேசன் தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த தன் சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான்.

கடந்த 2019 ஆம் வருடம் இக்கொடூரம் அரங்கேறிய நிலையில், மகளை பாதுகாக்க முயன்ற தாய் முருகேசனால் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பின்னர், மகளையும் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், முருகேசனை கொலை வழக்கில் கைது செய்து விசாரணை செய்கையில் அதிர்ச்சி தகவலாக தந்தையை மகளை சீரழித்த துயரம் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் முருகேசனை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணை புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று நீதிபதி சத்தியா முன்னிலையில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. 

இந்த தீர்ப்பில், முருகேசனின் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. முருகேசனுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தமிழக அரசு ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Court Judgement Daughter Sexual abuse and Wife Murder case Murugesan Death Sign


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->