கடனை அடைக்க சித்தி மகளை கொலை செய்து வீட்டில் கொள்ளையடித்த அண்ணன்.. புதுக்கோட்டையில் பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது பெரியப்பா மகன் கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன் நகர் பகுதியைச் சார்ந்தவர் பழனியப்பன். இவர் மின்வாரியத்தில் பணியாற்றி கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 

இவரது 20 வயது மகள் லோகப்பிரியா புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதல் வருடம் பயின்று வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில், லோகப்பிரியாவின் தாய் சிவகாமி வழக்கம் போல வேலைக்கு சென்று வீட்டுக்கு வந்து பார்க்கையில், கழுத்து அறுபட்ட நிலையில் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

மேலும், அவரது கழுத்து, காதில் அணிந்திருந்த 9 கிராம் தங்க நகை மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2000, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி வாகனம் போன்றவை மாயமாகி இருந்தது. இதனால் பணம் நகைக்காக கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்ட காவல்துறையினர், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். 

இந்நிலையில், அதிர்ச்சி தரும் விதமாக லோகப்பிரியாவின் பெரியப்பா மகன் சுரேஷ் லோகப்பிரியாவை கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. பழனியப்பன் இறந்த பின்னர் ஆண் துணை இல்லாத அந்த குடும்பத்திற்கு, சுரேஷ் அவ்வப்போது தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். 

சுரேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், உறுதியான வருமானம் தரும் தொழிலுக்குச் செல்லாமல் ஊர் சுற்றி பலரிடமும் கடன் வாங்கி வைத்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த நிலையில், பழனியப்பன் மின்வாரியத்தில் பணியாற்றி வந்தவர் என்பதால் அவர்களின் குடும்பம் வசதியாக இருந்த நிலையில், அவரின் வீட்டில் பணம் மற்றும் நகை இருக்கும் என்று எண்ணி சுரேஷ் இருந்துள்ளான். 

இதனால், சித்தியையும், தங்கையையும் வந்து பார்த்து உதவி செய்வதுபோல் வீட்டை நோட்டமிட்டு சென்ற நிலையில், சம்பவத்தன்று சிவகாமி வேலைக்கு சென்ற பின்னர், கொடூரன் லோகப்பிரியாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, வீடு முழுக்க பணம் மற்றும் நகையை தேடியுள்ளான். 

இதன் போது பீரோவில் ரூ.2000 மட்டும் இருந்த நிலையில், பணம் நகை சிக்காததால் லோகப்பிரியா அணிந்திருந்த நகைகளை திருடி, வாகனத்தையும் எடுத்து சென்றுள்ளான். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai College Girl Loga Priya Murder by Relation due to Robbery Money 29 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->