7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. கொலை.. புதுக்கோட்டையில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி.!!
Pudukkottai child sexual abuse police investigation
புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொடூர கொலை செய்யப்பட்டுள்ள சோகம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி பகுதியை சார்ந்த சிறுமி ஜெயப்பிரியா (வயது 7). இவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இந்நிலையில், சிறுமி சம்பவத்தன்று மாயமாகியுள்ளார். இவரை காணாது தேடியலைந்த பெற்றோர் சிறுமி காணாததால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த நிலையில், சிறுமி அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், சிறுமியின் உடலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளமும், அவரது ஆடைகள் கலைந்தும் இருந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு இணையத்தில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
காவல் துறையினரின் விசாரணையில், இதே பகுதியை சார்ந்த 27 வயது இளைஞரை சந்தேகத்தின் கீழ் கொண்டு வந்து விசாரணை செய்தனர். இதில், சிறுமியை 27 வயது இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pudukkottai child sexual abuse police investigation