சிறுமி கொலை வழக்கு குற்றவாளி தப்பியோடிய விவகாரம்.. அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி ஆவுடையார்கோயில் அருகேயுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட வீட்டிலிருக்கும் பெண் ஒருவரின் 7 வயது மகள் ஜெயப்பிரியா, இரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் கடந்த ஜூலை 27 ஆம் தேதி மாயமான நிலையில், இவரை தேடி அலைந்த பெற்றோர் இவரை காணவில்லை என்பதால் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

சிறுமியின் தந்தை கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், அவர் தினமும் பணிக்குச் சென்றுவிடுவார். மேலும், வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மட்டும் இருந்த நிலையில், சிறுமியை கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாது தவித்து வந்தனர். இந்த விஷயத்தில், பக்கத்து வீட்டுக்காரரான பூ வியாபாரி ராஜா, சிறுமியை கவனித்து வந்துள்ளான். 

மேலும், சிறுமி விரும்பும் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து பழகி வந்த நிலையில், சம்பவத்தன்று தனியாக அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். பின்னர் சிறுமியின் உடல் முழுவதும் காமுக கொடூரன் போல கடித்து, பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை அளித்துள்ளான். ஈவுஇரக்கமே இல்லாமல் அரங்கேறிய கொடூரத்தின் உச்சமாக தனது வெறியை தீர்த்து, கழுத்தை அறுத்து கொலை செய்து அங்குள்ள புதர் மறைவில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளான். 

ராஜாவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில், இன்று (16 ஜூன் 2020) புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அழைத்து சென்றுள்ளனர். அப்போது காமுகன் காவலர்களின் பிடியில் இருந்து தப்பி சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தப்பியோடிய காமுகனை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

காலையில் தப்பியோடியவன் இப்போது வரை சிக்காமல் இருக்கும் நிலையில், அப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார இடங்கள் மற்றும் காட்டுப்பகுதிகளில் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் முருகையன் மற்றும் கோபால் குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai child sexual abuse culprit missing case 2 police suspend


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->