காதல் கவிதைகளில் வித்தை புரிந்து, சித்து வேலை காண்பித்த கொடூரன்.. 2 மாத கர்ப்பிணியாக சிறுமி.!! - Seithipunal
Seithipunal


17 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி, 2 மாதம் கர்ப்பிணியாக்கிய காமுக கொடூரனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை பகுதியை சார்ந்தவன் ராஜகோபால். அங்குள்ள திருபுவனம் பகுதியை சார்ந்த 17 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். 

காமுகன் ராஜகோபாலிற்கு சிறுமியுடன் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்ட நிலையில், சிறுமியை காதலிப்பதாக கூறி பல கவிதைகளை அளந்துவிட்டுள்ளான். இதில் விழுந்த சிறுமியும், ராஜகோபாலும் காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதில் சிறுமி 2 மாத கர்ப்பிணியாக தற்போது இருக்கிறார். 

சிறுமியின் மீது சந்தேகம் கொண்ட பெற்றோர்கள் தீர விசாரணை செய்ததில், காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காமுகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai child sexual abuse by lover


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->