கொரோனாவிற்கு தமிழக இராணுவ வீரர் பலி.. 9 மாத கர்ப்பிணி மனைவி, இரட்டை குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுத சோகம்.!
Pudukkottai Army Officer Selvakumar Working Rajasthan Died Corona Virus 11 April 2021
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை டைமண்ட் நகர் பகுதியை சார்ந்தவர் செல்வகுமார் (வயது 34). இவர் இராணுவ வீரராக பணியாற்றி வரும் நிலையில், இராஜஸ்தான் மாநிலத்தில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணம் முடிந்து புவனேஸ்வரி என்ற மனைவியும், இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தற்போது புவனேஸ்வரி 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், செல்வகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.
இதன்பின்னர் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதியானது. உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் சக இராணுவ வீரர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தவே, செல்வகுமாரின் இறப்பு செய்தி கேட்டு குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இராஜஸ்தானில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக செல்வகுமாரின் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, அவரின் சொந்த ஊரான மறவனூர் சத்திரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pudukkottai Army Officer Selvakumar Working Rajasthan Died Corona Virus 11 April 2021