வாக்குப்பதிவு இயந்திரத்தை அரிவாளால் உடைத்த குடிகாரன்.. அறந்தாங்கியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக வாக்காள பெருமக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய காலை முதலாகவே வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் உட்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை இராணுவ படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி ஆலங்குடி வாக்குச்சாவடி மையத்திற்குள் மதுபோதையில் அரிவாளுடன் வந்த நபர், வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து உடைத்தால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக மதுபோதையில் வந்து அவர் தகராறு செய்கையில், பாதுகாப்பு படையினர் அவரை வெளியேற்றிய நிலையில், மீண்டும் அரிவாளுடன் வந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

மதியம் 3 மணிக்கே மதுபோதையில் வந்து தகராறு செய்தவரை காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர், மதுபோதை நபரை வெளியேற்றிய நிலையில், அரைமணிநேரத்திற்குள் மீண்டும் அரிவாளுடன் வந்து சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில் வந்தவரை கைது செய்த காவல் துறையினர், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Aranthangi Vote Booth Voting machine Damaged by Drunken Culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->