கடத்தல் சரக்கை பதுக்கி வைத்து விற்பனை.. அதிமுக பிரமுகர் கைது.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், கர்நாடக மாநிலத்தில் 1714 மது பாட்டில்களை கடத்தி வந்து பதுக்கி வைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே பெருங்காடு என்ற கிராமத்தில் அதிமுக பிரமுகராகவுள்ள ரவி என்பவருக்கு திருமண மண்டபம் ஒன்று சொந்தமாக இருக்கிறது. இதில், வெளிமாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த மண்டபத்தில் ஆய்வு செய்து மதுபாட்டில்கள் இருப்பதை உறுதி செய்து அங்கு நேரடியாக சென்று பார்வையிட்ட பொழுது, கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 1714 மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனை தொடர்ந்து மண்டபத்தின் உரிமையாளர் ரவி மற்றும் மது பாட்டில்களை கடத்தி வந்து பதுக்கி வைத்த ஐயப்பன் சிவகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் பைக் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai AIADMK Member Sales Illegally Liquor 9 June 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->