ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வீடு அமைந்துள்ள தெருவில் நடந்த விபத்து.! பதறிப்போன தமிழிசை சௌந்தர்ராஜன்.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த பெண் ஒருவருக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளார்.

இருசக்கர வாகனத்தில் சென்ற வயதான பெண் ஒருவருக்கு திடீரென அவருக்கு மயக்கம் வந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அதனை பார்த்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அவருக்கு முதலுதவி அளித்து, அவரை பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வீடு அமைந்துள்ள தெருவில், இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வயதான பெண் ஒருவர், திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, அந்தப் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளார். அப்போது அங்கிருந்து கூடியிருந்த மக்கள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUDUCHERRY GOVERNOR STREET ACCIDENT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->